ஈரானில் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க அனுமதி
ஈரானில் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க அனுமதி
ஈரானில் இன்று முதல் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தகங்கள் இயங்கவும் கலாசாரத் தலங்களைத் திறக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
COVID-19 நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த சில மாதங்களாக ஈரானில் பல கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன.
அவை தற்போது கட்டங்கட்டமாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன.
அடுத்த வாரம் முதல், அங்கு அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமதான் பண்டிகையையொட்டி அங்கு அருங்காட்சியகங்களும் வரலாற்றுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன.
ஈரானில் 130,000-க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது; 7,000-க்கும் அதிகமானோர் மாண்டனர்.