சீனா: 7.5 டன் எடையுள்ள யானைத் தந்தங்கள் பறிமுதல்
சீனாவில் 7.5 டன்னுக்கு மேலான யானைத் தந்தங்களை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சீனாவில் 7.5 டன்னுக்கு மேலான யானைத் தந்தங்களை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஒரே சோதனையில் கிட்டத்தட்ட 2,750 தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
விலங்கு தொடர்பான பொருள்கள் கடத்தப்படும்போது பிடிபட்ட சம்பவங்களில் ஆகப்பெரியது இது.
சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றதாகவும், சுங்கத்துறையும் காவல்துறையும் இணைந்து 6 மாநிலங்களில் நடத்திய சோதனையில் அவை பிடிபட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
சீனாவில் 2017ஆம் ஆண்டில் தந்தங்களையும் தந்தத்தால் ஆன பொருள்களையும் விற்கத் தடை விதிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டில் தந்தங்கள் தொடர்பான பொருள்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டது.
கடத்தல் சம்பவம் தொடர்பாக 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தந்தங்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவை என்று அதிகாரிகள் கூறினர்.