ஜக்கர்த்தா தேசிய நினைவுச்சின்னப் பூங்கா அருகே வெடிப்புச் சம்பவம் - சிலருக்குக் காயம்
இந்தோனேசியத் தலைநகரான ஜக்கர்த்தாவில் தேசிய நினைவுச்சின்னப் பூங்கா அருகே வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசியத் தலைநகரான ஜக்கர்த்தாவில் தேசிய நினைவுச்சின்னப் பூங்கா அருகே வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதில் குறைந்தது இரண்டு இந்தோனேசிய ராணுவ வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு வெடிப்புச் சத்தம் கேட்டது.
சம்பவ இடத்தில் ஒருவர் மாண்டதாக Metro TV அதன் Twitter பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பூங்கா அருகே இந்தோனேசிய தேசிய ராணுவப் படையினர் பயிற்சிகளை நடத்திய வேளையில் வெடிப்புச் சம்பவம் நேர்ந்தது என்று Metro TV தெரிவித்துள்ளது.
வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததைக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அவ்வட்டாரப் பயணிகளையும் போக்குவரத்தையும் சோதனை செய்ய, சாலை வழிமறிக்கப்பட்டுள்ளது என்று அது கூறியது.