ஜக்கர்த்தாவில் மீண்டும் முடக்கநிலை
இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் மீண்டும் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் மீண்டும் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, அங்கு பெரிய அளவில் சமூகக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன.
பள்ளிகளும், பூங்காக்களும் மூடப்பட்டு விட்டன. திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.
குறைந்தது, இரண்டு வாரத்துக்குக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும். அவை நீட்டிக்கப்படுமா என்பது பற்றி நிலைமையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்று ஜக்கர்த்தா ஆளுநர் அனிஸ் பாஸ்வேடான் (Anies Baswedan) கூறினார்.
இந்தோனேசியாவில் 220,000 பேருக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் அவதிப்படுகின்றனர்.
தென்கிழக்காசியாவில் பிலிப்பீன்ஸுக்கு அடுத்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு இந்தோனேசியா.