ஜப்பான்: காவல்துறை அதிகாரிக்குக் கத்திக் குத்து - சந்தேக நபர் கைது
ஜப்பானில் ஒசாகா நகருக்கு அருகே காவல்துறை அதிகாரியைக் கத்தியால் குத்தி, அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்த சந்தேக நபர் (33 வயது) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் ஒசாகா நகருக்கு அருகே காவல்துறை அதிகாரியைக் கத்தியால் குத்தி, அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்த சந்தேக நபர் (33 வயது) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அடுத்த வாரம் ஒசாகாவில் G20 உச்சநிலை மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில் இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்தேக நபர் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துவருகிறார்.
அடுத்தவாரம் முக்கிய சந்திப்புகள் நடக்கவிருக்கும் நிலையில் அரசாங்கம் விழிப்பு நிலையையும் பாதுகாப்பையும் முடுக்கிவிடும் என அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.