Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் COVID-19 நெருக்கடிநிலை விரைவில் முடிவுக்கு வரலாம்

 ஜப்பானில் COVID-19 நெருக்கடிநிலை விரைவில் முடிவுக்கு வரலாம்

வாசிப்புநேரம் -
ஜப்பானில் COVID-19 நெருக்கடிநிலை விரைவில் முடிவுக்கு வரலாம்

கோப்புப் படம்: AFP / Kazuhiro NOGI

ஜப்பானில் COVID-19 நோய்த்தொற்று பாதிப்புகள் குறைந்து, இப்போது நிலைமை மேம்படத் தொடங்கியுள்ளது.

அதனால் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடப்பில் உள்ள நெருக்கடிநிலை விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோய்த்தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது; படுக்கை வசதிகள் அதிகரித்துள்ளன.

இம்மாத இறுதிக்குள் தோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் நெருக்கடிநிலை முடிவுக்கு வரலாம் என்று ஜப்பானிய சுகாதார அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நிபுணர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு ஜப்பான் அமைச்சரவை அது குறித்து முடிவெடுக்கும் என்று அமைச்சு கூறியது.

டெல்ட்டா வகை கொரோனா கிருமியால் ஜப்பானில் ஐந்தாம் கட்ட நோய்ப்பரவல் ஏற்பட்டது. அதனால் கடந்த மாதம் அங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் புதிய உச்சத்தைத் தொட்டன.

மருத்துவக் கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படாமல் இருக்க, இம்மாத இறுதிவரை ஜப்பானில் கடுமையான முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

- Reuters/dv 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்