ஜப்பான்: மேலும் 7 மாநிலங்களில் நெருக்கடி நிலையை அறிவிக்கத் திட்டம்
ஜப்பான்: மேலும் 7 மாநிலங்களில் நெருக்கடி நிலையை அறிவிக்கத் திட்டம்
ஜப்பானில் நடப்பிலுள்ள நெருக்கடி நிலையை மேலும்
7 மாநிலங்களுக்கு விரிவுபடுத்த அதன் அரசாங்கம் திட்டமிடுகிறது.
கடந்த வாரம் தோக்கியோ வட்டாரத்தில் கிருமித்தொற்று காரணமாக அங்கு நெருக்கடிநிலைக்கு உத்தரவிடப்பட்டது.
நோய்ப்பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒசாகா (Osaka), Hyogo (ஹியோகோ), ஐச்சி (Aichi) உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் நெருக்கடிநிலையை விரிவுபடுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெருக்கடிநிலையின்போது, குடியிருப்பாளர்களின் நடமாட்டம் மீதும் வர்த்தகங்கள் மீதும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
ஜப்பானில் மூன்றாவது முறையாகக் கிருமிப்பரவல் உச்சத்தை எட்டியுள்ளது.
அதன் காரணமாக இவ்வாண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
16 விழுக்காட்டினர் மட்டுமே தோக்கியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆதரவளிப்பதாக NHK செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.