Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான் உணவகத்தில் தீ - 40க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் வடக்கில் உள்ள சப்போரோ (Sapporo) நகரின் உணவகம் ஒன்றில் பெரும் வெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட தீயைத் தீயணைப்பாளர்கள் அணைத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜப்பானின் வடக்கில் உள்ள சப்போரோ (Sapporo) நகரின் உணவகம் ஒன்றில் பெரும் வெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட தீயைத் தீயணைப்பாளர்கள் அணைத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தீ விபத்தில் நாற்பதுக்குக் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெடிப்புக்குப் பிறகு அதிகாரிகள் அந்த இடத்தைச் சுற்றி வேலி அமைந்துள்ளனர்.

மேலும் வெடிப்புகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

நேற்று (டிசம்பர் 16) இரவு 8.30 மணிக்கு வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறின.

வெடிப்பு வலுவாக இருந்ததால் பக்கத்தில் உள்ள கட்டடங்கள் சாய்ந்தன என்றும் அதிகாரிகள் கூறினர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வெடிப்பைத் தொடர்ந்து எரிவாயு வாசனை உணரப்பட்டதாகக் கூறினர்.

வெடிப்பால் உணவகத்தின் கண்ணாடிகள் உடைந்ததாக அங்கு வேலை பார்க்கும் ஒருவர் தெரிவித்தார்.

இன்னொருவர் வெடிச்சத்தம் போல் அந்த வெடிப்பு கேட்டதாகக் கூறினார்.

வெடிப்புக்கான கராணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்