காட்டில் காணாமற்போன இரண்டு வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்
தாத்தாவுடன் காட்டிற்கு உலா சென்றான் இரண்டு வயதுச் சிறுவன். வீட்டிற்கும் காட்டிற்கும் 100 மீட்டர் உள்ள தூரத்தில் தனியாக வீட்டிற்குத் திரும்பிச் செல்ல தாத்தா பேரனை அனுமதித்தார்.
தாத்தாவுடன் காட்டிற்கு உலா சென்றான் இரண்டு வயதுச் சிறுவன். வீட்டிற்கும் காட்டிற்கும் 100 மீட்டர் உள்ள தூரத்தில் தனியாக வீட்டிற்குத் திரும்பிச் செல்ல தாத்தா பேரனை அனுமதித்தார்.
ஆனால், சிறுவன் வீடு திரும்பவில்லை.
சிறுவனுக்காகக் காத்திருந்த அவனது தாய் கலங்கிப் போனார்.
ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து இரு நாட்கள் தனியாக வனப்பகுதியில் கழித்த சிறுவன் இன்று காலை தொண்டூழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டான்.
பலத்த காயங்கள் ஏதுமில்லாமல் பாதுகாப்பான நிலையில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டது, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஜப்பானின் யமாகுச்சி வட்டாரத்தில் நடந்தது இந்தச் சம்பவம்.
மேலும், சிறுவன் காட்டில் சிக்கிக்கொண்ட மூன்று நாட்களுக்கு அவ்விடத்தின் வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸ்.
ஆனால், அருகில் ஓடிய ஆற்றிலிருந்து நீரைப் பருகி சிறுவன் பிழைத்துக்கொண்டதாக நம்பப்படுகிறது.
சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறிய சிராய்ப்புகள் மட்டுமே அவன் உடலில் தென்பட்டன.
உடலில் நீர்ச்சத்து சற்றுக் குறைந்து காணப்பட்டதே தவிர பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்பதில் சிறுவனின் தாய்க்கு மட்டற்ற மகிழ்ச்சி.