ஜப்பான்: அன்பர் தினத்தன்று தங்கள் அன்புக்குப் போராடும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்
ஜப்பானில் தங்கள் அன்புக்காகப் போராட அன்பர் தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் ஓரினச் சேர்க்கைத் தம்பதிகள்.
ஜப்பானில் தங்கள் அன்புக்காகப் போராட அன்பர் தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் ஓரினச் சேர்க்கைத் தம்பதிகள்.
வெவ்வேறு நகரங்களைச் சேர்ந்த 13 ஓரினச் சேர்க்கைத் தம்பதிகள் திருமணம் புரிவதற்கு உரிமை கேட்டுச் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு இன்றைய தினத்தைத் (பிப்ரவரி 14) தேர்ந்தெடுத்துள்ளனர்.
திருமணம் புரிந்துகொள்வதைத் தடுப்பதன்மூலம் தங்கள் அரசமைப்பு உரிமைகள் பறிக்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தங்களுடைய அன்பு அங்கீகரிக்கப்படாததால் மனத்தளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தம்பதிகள் வழக்குத் தொடுக்கின்றனர்.
அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஜப்பானில் ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் வருங்காலத்தில் அனுமதிக்கப்படவேண்டும்.