இந்தியா-ஜப்பான் 2-Plus-2 சந்திப்பு ரத்து
ஜப்பானுடனான சிறப்பு 2-Plus-2 சந்திப்பை புதுடில்லி ரத்து செய்துள்ளது.
ஜப்பானுடனான சிறப்பு 2-Plus-2 சந்திப்பை புதுடில்லி ரத்து செய்துள்ளது.
கிழக்கு, தென் சீனக் கடல் வட்டாரங்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்து ஆராய்வதற்காக அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 260,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா கிருமி கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2-Plus-2 சந்திப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது.