ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு சுமார் 18,000 பேருக்குத் தடுப்பூசி
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு சுமார் 18,000 பேருக்குத் தடுப்பூசி
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, சுமார் 18,000 ஊழியர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது.
போட்டிகள் தொடங்க இன்னும் ஆறு வாரங்களே உள்ள நிலையில், அவற்றை ஒத்திவைக்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
போட்டிகளின் போது, பல்வேறு கொரோனா கிருமி வகைகள் ஜப்பானில் பரவக்கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர்.
தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால், ஊழியர்களும் தொண்டூழியர்களும் மன நிம்மதியுடன் பணியாற்றுவர் என, 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் செய்க்கோ ஹஷிமோட்டோ (Seiko Hashimoto) நம்பிக்கை தெரிவித்தார்.