ஜப்பான்: நாகசாகி தாக்குதல் தொடர்பில் நினைவஞ்சலி
ஜப்பானின் நாகசாகி (Nagasaki) நகரில், 75 ஆண்டுகளுக்குமுன் அணுகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றதை முன்னிட்டு அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜப்பானின் நாகசாகி (Nagasaki) நகரில், 75 ஆண்டுகளுக்குமுன் அணுகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றதை முன்னிட்டு அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நகரின் அமைதிப் பூங்காவில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், பிரதமர் ஷின்ஸோ அபே உள்பட 500 பேர் கலந்துகொண்டனர்.
COVID-19 சூழல் காரணமாகப் பொதுமக்கள் இம்முறை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாது.
அணுகுண்டுத் தாக்குதல் நடைபெற்ற அதே நேரத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அந்தத் தாக்குதலில் 70,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.