COVID-19: ஹொக்காய்டோவில் பள்ளிகள் மூடப்படும்
ஜப்பானின் வடக்கு ஹொக்காய்டோ (Hokkaido) மாநிலத்தில் நாளை முதல் தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் அடுத்த சில நாள்களுக்கு மூடப்படவுள்ளன.
ஜப்பானின் வடக்கு ஹொக்காய்டோ (Hokkaido) மாநிலத்தில் நாளை முதல் தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் அடுத்த சில நாள்களுக்கு மூடப்படவுள்ளன.
அந்தப் பகுதியில் மட்டும் 35 பேருக்கு COVID-19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் தோக்கியோவுக்கு வெளியே அதுவே ஆக அதிகமான எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள், உணவங்காடி ஊழியர்கள் ஆகியோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹொக்காய்டோ மாநிலத்தில் கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய ஜப்பானிய அரசாங்கம், சிறப்பு வல்லுநர் குழு ஒன்றை அனுப்பத் திட்டமிடுகிறது.