ஜப்பான்: ஹகிபிஸ் சூறாவளியால் நால்வர் மரணம்
ஜப்பானைப் புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த ஹகிபிஸ் (Hagibis) சூறாவளியால் நால்வர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஜப்பானைப் புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த ஹகிபிஸ் (Hagibis) சூறாவளியால் நால்வர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ராணுவம் நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஹகிபிஸ் சூறாவளி இன்று வலுவிழந்தபோதும் பல்வேறு சேதங்களைவிட்டுச் சென்றுள்ளது.
மத்திய ஜப்பானின் நகானோ (Nagano) நகரில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்புகளின் இரண்டாவது தளம் வரை சூழ்ந்துகொண்டது.
ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் வீட்டின் மேல் மாடிகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
கடும் வெள்ளம், நிலச்சரிவு, பலத்த காற்று ஆகியவற்றால் சுமார் 7 மில்லியன் பேர் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டுள்ளது.