ஹோட்டல் அறைகளை 3,250 முறை முன்பதிவு செய்துவிட்டு ரத்து செய்த தாயும் மகனும் சிறையில்
ஜப்பானில் ஒரு வித்தியாசமான குற்றம் செய்த தாய்-மகன் கூட்டணி காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் ஒரு வித்தியாசமான குற்றம் செய்த தாய்-மகன் கூட்டணி காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏமாற்று முன்பதிவுகள் தொடர்பாகக் கடந்த நவம்பர் மாதம் காவல்துறையிடம் 3 ஹோட்டல்கள் புகார் கொடுத்தன.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஏமாற்று முன்பதிவுகள் மூலம் ஹோட்டல்களுக்குச் சுமார் 1 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
தாயும் மகனும் கிட்டத்தட்ட 3,200 முறை ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்துவிட்டு ஹோட்டலுக்குச் செல்லாமல் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
அதேநேரத்தில் தாய்-மகன் கூட்டணிக்கு 22,000 டாலர் மதிப்புள்ள புள்ளிகள் கிடைத்துள்ளன.
கைது செய்யப்பட்ட தாய்க்கு 51 வயது என்றும் மகனுக்கு 31 வயது என்றும் அதிகாரிகள் கூறினர்.