Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர் கார் விபத்தில் 10 மாதப் பெண் குழந்தை பலி

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் 10 மாதப் பெண் குழந்தை மாண்டது.

வாசிப்புநேரம் -
ஜொகூர் கார் விபத்தில் 10 மாதப் பெண் குழந்தை பலி

சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுவரும் படம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் 10 மாதப் பெண் குழந்தை மாண்டது.

காரில் இருந்த அதன் பெற்றோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

காரில் இருந்த மற்றொரு 2 வயதுக் குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 1:15 மணியளவில்(ஏப்ரல் 14)  ஜலான் லிங்காரான் டலாமில் (Jalan Lingkaran Dalam) நடந்தது.

குழந்தையின் குடும்பத்தினர் பயணம் செய்த காரின் பின்பகுதியில் மற்றொரு கார் வந்து மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தில் குழந்தையின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அது மாண்டது.

மோதிய காரின் ஓட்டுநருக்கு காயம் ஏதுமில்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்