தண்ணீர் விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தலையிடாமல் இருப்பதே தமது விருப்பம்: ஜொகூர் பட்டத்து இளவரசர்
சிங்கப்பூருக்கு விற்கப்படும் தண்ணீர் ஜொகூர் மாநிலத்துக்குச் சொந்தமானது, அதில் மலேசிய அரசாங்கம் தலையிடாமல் இருப்பதே தமது விருப்பம் என்று ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்கு விற்கப்படும் தண்ணீர் ஜொகூர் மாநிலத்துக்குச் சொந்தமானது, அதில் மலேசிய அரசாங்கம் தலையிடாமல் இருப்பதே தமது விருப்பம் என்று ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் கூறியுள்ளார்.
தண்ணீர் விவகாரத்தில் ஜொகூர் மாநிலத்திற்கே அரசுரிமை இருக்கிறது என்றும் அதனால் ஜொகூர் மாநில அரசாங்கமே அதன் தொடர்பில் இருதரப்புக்கும் சாதகமான முடிவை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
சென்ற மாதம் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது சிங்கப்பூருக்கு விற்கப்படும் தண்ணீர் விலை நியாயமற்ற வகையில், மிகவும் மலிவாக விற்கப்படுவதாகக் கூறியிருந்தார்.
தண்ணீரின் விலைகுறித்துக் கேட்டபோது அதைப் பற்றி ஜொகூர் மாநில அரசாங்கம் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
எடுக்கப்படும் முடிவு இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கக் கூடியதாகவே இருக்கவேண்டும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.
சிங்கப்பூரும் மலேசியாவும் அண்டை நாடுகள். அதனால் இருநாடுகளும் பயன்பெறும் வகையிலேயே தண்ணீர் விவகாரம் குறித்த முடிவு அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.