அதிவேக ரயில் திட்டத்திலிருந்து மலேசியா பின்வாங்கக் கூடாது: ஜொகூர் பட்டத்து இளவரசர்
அதிவேக ரயில் திட்டத்திலிருந்து மலேசியா பின்வாங்கக் கூடாது என்று சேனல் நியூஸ்ஏஷியாவிடம் பேசிய ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் கூறியுள்ளார்.
அதிவேக ரயில் திட்டத்திலிருந்து மலேசியா பின்வாங்கக் கூடாது என்று சேனல் நியூஸ்ஏஷியாவிடம் பேசிய ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் கூறியுள்ளார்.
கோலாலம்பூருக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டத்தால் நன்மையே விளையும் என்றும் அதைத் தொடர்வதே சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜொகூரின் பொருளியலை மேம்படுத்த அத்திட்டம் உதவும் என்று கருதுவதாக அவர் கூறினார்.
இருப்பினும், அந்தத் திட்டத்தைத் தொடர்வது குறித்த முடிவை மலேசிய அரசாங்கமே எடுக்க வேண்டும் எனவும் இளவரசர் சொன்னார்.
இறுதி முடிவு இரு நாடுகளின் அரசாங்கங்களைப் பொறுத்ததே என்றார் அவர்.