காஷ்மீர் பகுதியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
இந்திய அதிகாரிகள் காஷ்மீர் பகுதியில் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளனர்.
இந்திய அதிகாரிகள் காஷ்மீர் பகுதியில் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளனர்.
குடியிருப்பாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நேற்றிரவு வன்முறை மூண்டதையடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய மூத்த அரசாங்க அதிகாரிகள் அவ்வாறு கூறினர்.
நேற்றைய மோதலில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
காஷ்மீரில், கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ச்சியாகப் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள், காஷ்மீரின் சிறப்புத் தகுதியைப் புதுடெல்லி ரத்துசெய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா நேற்று காஷ்மீர் வட்டாரத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கிய உடனேயே அந்த ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.