வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் வரும் 25ஆம் தேதி வியட்நாமில் தரையிறங்குவார்
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் வரும் 25ஆம் தேதி வியட்நாமில் தரையிறங்குவார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் வரும் 25ஆம் தேதி வியட்நாமில் தரையிறங்குவார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புடன் இரண்டாம் உச்சநிலை சந்திப்பை நடத்த அவர் வியட்நாம் செல்லவிருக்கிறார்.
இரு நாட்டுத் தலைவர்களும் பிப்ரவரி 27 மற்றும் 28ஆம் தேதி அங்கே சந்திக்கவிருக்கின்றனர்.
திரு. கிம் ஹனொய்யில் தரையிறங்கியவுடன், வியட்நாமிய அதிகாரிகளைச் சந்திப்பார் என நம்பப்படுகிறது.
அதன்பின் அவர் வியட்நாமிய உற்பத்தித் தளத்திற்குச் சென்று பார்வையிடுவார் எனவும் கூறப்பட்டது.