கிம் ஜொங் நாம் கொலை வழக்கில் போதிய ஆதாரம் கிடைத்துள்ளது: மலேசிய நீதிமன்றம்
20இலிருந்து 30 வயதுக்கு உட்பட்ட அந்தப் பெண்கள், தொலைக்காட்சிக் குறும்பு நிகழ்ச்சியில் தாங்கள் பங்கெடுப்பதாய் நினைத்திருந்ததாகக் கூறுகின்றனர்.
கிம் ஜொங் நாம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பெண்களுக்கு எதிராகப் போதிய ஆதாரம் கிடைத்திருப்பதால் அவர்களுக்கு எதிரான வழக்கு தொடரும் என்று மலேசிய நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி அயிஷா, வியட்நாமியரான டோஆன் தி ஹியோங் இருவரும் விடுவிக்கப்படலாம் அல்லது அவர்கள் தரப்பு வாதத்துக்கு வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.
இரு பெண்களும் திரு. கிம்-மின் முகத்தில் நச்சு இரசாயனத்தைப் பூசி அவரைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
மலேசியச் சட்டத்தின் கீழ், கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.
20இலிருந்து 30 வயதுக்கு உட்பட்ட அந்தப் பெண்கள், தொலைக்காட்சிக் குறும்பு நிகழ்ச்சியில் தாங்கள் பங்கெடுப்பதாய் நினைத்திருந்ததாகக் கூறுகின்றனர்.
ஆனால் அவர்கள், வடகொரிய அதிகாரிகளால் கவனமாகப் பயிற்றுவிக்கப்பட்ட கொலைகாரர்கள் என்று அரசாங்கத் தரப்பு வாதிடுகிறது.
கொலை வழக்கின் தொடர்பில், வடகொரியாவைச் சேர்ந்த 4 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.