தாய்லந்து: நான்கு மீட்டர் ராஜநாகம் மீட்பு
நான்கு மீட்டர் நீள ராஜநாகம் ஒன்றை பாதாள சாக்கடையிலிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். அந்த மீட்புப் பணி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. தாய்லந்தில் இதுவரை பிடிபட்டிருக்கும் ஆகப்பெரிய பாம்பு அது.
பேங்காங்: நான்கு மீட்டர் நீள ராஜநாகம் ஒன்றை பாதாள சாக்கடையிலிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். அந்த மீட்புப் பணி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. தாய்லந்தில் இதுவரை பிடிபட்டிருக்கும் ஆகப்பெரிய பாம்பு அது.
பாம்பைப் பிடிக்க அதிகாரிகள் பல வழிகளில் முயன்றனர். இறுதியில் அவர்கள் பாம்பின் வாலைப் பிடித்து பாதாள சாக்கடையிலிருந்து அதனை வெளிக்கொணர்ந்தனர்.
குடியிருப்புப் பகுதியில் அந்தப் பாம்பு காணப்பட்டது. 7 அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாம்பின் எடை 15 கிலோகிராம். பிடிக்கப்பட்ட பாம்பு மீண்டும் காட்டுப் பகுதியில் பத்திரமாகக் கொண்டுபோய் விடப்பட்டது.