இரு கொரியாக்களையும் ஒன்றிணைத்த விளையாட்டு
இரு கொரியாக்களையும் சேர்ந்த ஊழியர்கள், காற்பந்து ஆட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.
இரு கொரியாக்களையும் சேர்ந்த ஊழியர்கள், காற்பந்து ஆட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.
தென்கொரிய தலைநகர் சோலில் ஆட்டம் நடைபெற்றது.
தென்கொரிய அதிபரும், வடகொரிய தலைவரும் கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது காற்பந்தாட்டத்தின் நோக்கம்.
பொதுமக்கள், தொழிற்சங்க-வாதிகள், விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் ஆட்டத்தைக் கண்டனர்.
இந்தோனேசியாவில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரு கொரியாக்களும் கூட்டாகக் குழுக்களை அனுப்பவிருக்கின்றன.
போட்டிகளின் தொடக்க, நிறைவு நிகழ்ச்சிகளிலும், இரு கொரியாக்களையும் சேர்ந்த விளையாட்டாளர்கள் இணைந்து அணிவகுத்துச் செல்லவிருக்கின்றனர்.