கொரிய உச்சநிலைச் சந்திப்பு குறித்து இன்று முடிவெடுக்கப்படும்
இரு கொரியாக்களின் தலைவர்களுக்கு இடையிலான உச்சநிலைச் சந்திப்பு குறித்து, இன்று (ஆகஸ்ட் 13) நடைபெறவிருக்கும் இருநாட்டு உயர்அதிகாரிகளின் சந்திப்பில் முடிவெடுக்கப்படும் என்று தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரு கொரியாக்களின் தலைவர்களுக்கு இடையிலான உச்சநிலைச் சந்திப்பு குறித்து, இன்று (ஆகஸ்ட் 13) நடைபெறவிருக்கும் இருநாட்டு உயர்அதிகாரிகளின் சந்திப்பில் முடிவெடுக்கப்படும் என்று தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வட கொரியா அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
பான்முன்ஜோம் எல்லைக் கிராமத்தில், இரு தரப்பு அதிகாரிகளும் சந்தித்துக் கலந்துரையாடுவர்.
ஏப்ரல் மாத உச்சநிலைச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்படும்.
சந்திப்பு நடைபெறவிருக்கும் வேளையில், வட கொரியாவின் பரப்புரைக்கான இணையத் தளம், சோல் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தக் கடுமையான முயற்சி எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறது.