Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் யானை

இலங்கையில் துரும்பெனக் காட்சியளிக்கும் யானையின் அவலநிலை சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.

வாசிப்புநேரம் -
எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் யானை

Save Elephant Foundation/Facebook

இலங்கையில் துரும்பெனக் காட்சியளிக்கும் யானையின் அவலநிலை சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.

தாய்லந்தில் உள்ள Save Elephant Foundation அறநிறுவனம் திக்கிரி (Tikiri) எனும் 70 வயது யானையின் நிலையைப் பற்றி அதன் Facebook பக்கத்தில் பதிவு செய்திருந்தது.

இலங்கையின் ஏசலா பெரஹேரா (Esala Perahera) விழாவின்போது திக்கிரி துன்புறுத்தப்பட்டதாக அது குற்றஞ்சாட்டியது.

சத்தம், வாணவேடிக்கை, புகை ஆகியவற்றுக்கு இடையே 10 நாள்களுக்குத் திக்கிரி தொடர்ந்து நடக்க வேண்டியிருந்ததாக அறநிறுவனம் கூறியது.

வருடாந்திர பௌத்தத் திருவிழாக் கொண்டாட்டங்களின் அங்கமாக அது அமைந்தது.

அந்தப் பதிவுடன் இணைக்கப்பட்ட நிழற்படங்களில் மிகவும் மெலிந்த தோற்றத்துடன் ஒரு யானை காணப்பட்டது.

எலும்பும் தோலுமாக இருந்த அந்த விலங்கின் காலைச் சுற்றி சங்கிலி இருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்