உலகிலே பெரிய மூளைக் கட்டியை அகற்றிய இந்திய மருத்துவர்கள்
மும்பை: இந்தியாவிலுள்ள மருத்துவர்கள் உலகிலேயே பெரிய மூளைக் கட்டியை அகற்றியுள்ளனர்.
மும்பை: இந்தியாவிலுள்ள மருத்துவர்கள் உலகிலேயே பெரிய மூளைக் கட்டியை அகற்றியுள்ளனர்.
7 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு 1.8 கிலோ கிராம் எடையுள்ள அந்தக் கட்டி அகற்றப்பட்டது.
என்றாலும் சிகிச்சை முறை பற்றிய முழுமையான தகவலை மருத்துவர்கள் வெளியிடவில்லை.
3 ஆண்டுகள் அந்தக் கட்டியால் அவதிப்பட்ட 31 வயது சந்தலால் பால் (Santlal Pal) தமது கண் பார்வையை இழந்தார்.
சிகிச்சைக்குப் பிறகு அவருடைய கண் பார்வை திரும்பக்கூடும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.
தற்போது, சந்தலால் பாலின் நிலைமை சீராக உள்ளதாகவும் விரைவில் அவர் முழுமையாகக் குணமடைவார் என்றும் மருத்துவர்கள் கூறினர்.