சீனா: லெக்கிமா சூறாவளிக்கு 32 பேர் பலி
கிழக்கு சீனாவில் லெக்கிமா (Lekima) சூறாவளியால் மாண்டோரின் எண்ணிக்கை 32க்கு அதிகரித்துள்ளது.
கிழக்கு சீனாவில் லெக்கிமா (Lekima) சூறாவளியால் மாண்டோரின் எண்ணிக்கை
32க்கு அதிகரித்துள்ளது.
16 பேரை காணவில்லை.
அந்த கடும் சூறாவளியால் போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில், ஆயிரக்கணக்கான விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
திடீர் வெள்ளங்களாலும் நிலச்சரிவுகளாலும் 170 ஆயிரம் ஹெக்ட்டருக்கும் அதிகமான விளைநிலங்கள் சேதமடைந்தன.
அந்த சூறாவளியால் 34,000 வீடுகளும் சேதமடைந்தன.
சூறாவளியால் மொத்தம் 2 பில்லியன் டாலர் பொருளியல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்தது.