இந்தோனேசிய விமான நிலையத்தின் ஓடுபாதையில் சறுக்கிய Lion Air விமானம்
இந்தோனேசிய விமான நிலையத்தின் ஓடுபாதையில் Lion Air விமானம் சறுக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசிய விமான நிலையத்தின் ஓடுபாதையில் Lion Air விமானம் சறுக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
கனத்த மழை பெய்த வேளையில், சுப்படியோ (Supadio) அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இன்று (பிப்ரவரி 16) விமானம் சறுக்கியது.
அச்சம்பவம் நிகழ்ந்தபோது, விமானத்தினுள் 182 பயணிகளும் விமான ஊழியர்கள் 7 பேரும் இருந்தனர். என்றாலும் எவருக்குக் காயமில்லை என்று Lion Air நிறுவனப் பேச்சாளர் டனாங் மண்டாலா பிரிஹன்டோரோ (Danang Mandala Prihantoro) குறிப்பிட்டார்.