என் மீது வருத்தம் இருந்தால் பரவாயில்லை;எனக்கும் மற்றவர்கள் மீது வருத்தம் உண்டு: மலேசியப் பிரதமர் மகாதீர்
தம்மீது வருத்தம் இருந்தால் பரவாயில்லை; தமக்கும் மற்றவர்கள் மீது வருத்தம் உள்ளதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.
(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)
மலேசியா: தம்மீது வருத்தம் இருந்தால் பரவாயில்லை; தமக்கும் மற்றவர்கள் மீது வருத்தம் உள்ளதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.
முன்னாள் மக்கள் நீதிக் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் The Straits Times நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்ட கருத்துகளுக்கு டாக்டர் மகாதீர் அவ்வாறு பதிலளித்தார்.
புதிய அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் மெதுவாக நடைபெறுவது வருத்தத்தை அளிப்பதாகக் குமாரி நூருல் இஸ்ஸா கூறியிருந்தார்.
அவருடைய கருத்துகளைத் தொடர்ந்து பல்வேறு அரசியல்வாதிகள் பிரதமர் மகாதீரைத் தற்காத்துப் பேசியுள்ளனர்.