எல்லைகளை மீண்டும் திறப்பதில் மலேசிய அவசரம் காட்டாது - பிரதமர் முஹிதீன் யாசின்
எல்லைகளை மீண்டும் திறப்பதில் மலேசிய அவசரம் காட்டாது - பிரதமர் முஹிதீன் யாசின்
மலேசியா தனது எல்லைகளை மீண்டும் திறப்பதில் அவசரம் காட்டாது என்று அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் கூறியுள்ளார்.
கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தவும், கள்ளக் குடியேறிகளின் வருகையைச் சோதிக்கவும் எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றார் அவர்.
சிரமங்கள் இருப்பினும், நாட்டையும் மக்களையும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கக் கட்டுப்பாடுகள் தேவை என்று திரு. முஹிதீன் கூறினார்.
வர்த்தக நடைமுறைகளைத் தவிர, ஏனைய காரணங்களுக்கு மலேசியாவின் எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.