மலேசியா: கள்ளக் குடியேறிகளில் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று
மலேசியாவில் இன்று 187 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவில் இன்று 187 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் கள்ளக் குடியேறிகள் என்றும் அவர்கள் தடுப்பு நிலையங்களில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் மட்டுமே மலேசியர்கள். 155 பேர் புக்கிட் ஜலீல் குடிநுழைவுத் தடுப்பு நிலையத்தில் உள்ளவர்கள்.
மலேசியாவில் மேலும் இரண்டு தடுப்பு நிலையங்களிலும் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானத் தளங்களில் 3 கிருமித்தொற்று குழுமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்கு 88 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது, அவர்களில் அதிகமானோர் வெளிநாட்டு ஊழியர்கள்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து தற்போது மலேசியாவில் 7,604 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாண்டவர்கள் எண்ணிக்கை 115 ஆக நீடிக்கிறது.