மலேசியா: மீண்டும் ஒரே நாளில் 6,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள்
மலேசியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மீண்டும் 6,000க்கு மேல் பதிவாகியுள்ளதாக, சுகாதாரத் துறை
மலேசியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மீண்டும் 6,000க்கு மேல் பதிவாகியுள்ளதாக, சுகாதாரத் துறை நிர்வாக இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா (Noor Hisham Abdullah) கூறியுள்ளார்.
இன்று அங்கு புதிதாக, 6,239 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
சிலாங்கூரில் ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் (Negeri Sembilan) ஆகிய பகுதிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.
ஜொகூரில் 468 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
இதுவரை மலேசியாவில் மொத்தம் சுமார் 634,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.