COVID-19: மலேசியாவில் இன்று புதிதாக 9 பேருக்கு நோய்த்தொற்று
COVID-19: மலேசியாவில் இன்று புதிதாக 9 பேருக்கு நோய்த்தொற்று
மலேசியாவில் இன்று புதிதாக 9 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். மற்ற இரண்டுபேருக்கு சமூக அளவில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியாவில் இன்று முதல், கூட்டம் அதிகமுள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.
விதிமுறைகளை மீறினால் 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும்.
மலேசியாவில் 8,985 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
213 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.