மலேசியாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
மலேசியாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
மலேசியாவில், சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, ஜொகூர், சபா, கோலாலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் அண்மைக்காலமாக COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவருவதையொட்டி அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு மக்களின் அலட்சியப் போக்கு காரணமா? அமலாக்க நடவடிக்கைகளில் காணப்படும் பலவீனம் காரணமா?
விளக்குகிறார் மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் முனியாண்டி.
கடந்த 24 மணி நேரத்தில் 2,232 பேர் புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 138,000-ஐக் கடந்தது.
புதிதாக 4 பேர் நோய்த் தொற்றினால் மரணமடைந்திருப்பதை அடுத்து, மலேசியாவில் மொத்த மரண எண்ணிக்கை 555ஆக அதிகரித்துள்ளது.