COVID-19: மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டியது
COVID-19: மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டியது
மலேசியாவில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டியுள்ளது.
இன்று மேலும் 31 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களையும் சேர்த்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,009-க்கு அதிகரித்துள்ளது.
கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 114 .
மலேசியாவில் தற்போது சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நேரத்தில் அங்கு மீண்டும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியிருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.