வட கொரியாவில் மலேசியா மீண்டும் தூதரகத்தைத் திறக்கும்: மகாதீர்
வட கொரியாவில் மலேசியா மீண்டும் தூதரகத்தைத் திறக்கும்: மகாதீர்
கோலாலம்பூர்: பியோங்யாங்கில் மலேசியா மீண்டும் தூதரகத்தைத் திறக்கும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கோலாலம்பூரில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே ஆன அரசதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.
விரிசலை முடிவிற்குக் கொண்டு வரும் வகையில் தூதரகத்தின் திறப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.