Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: புகைமூட்ட நிலவரம் முன்னேற்றம் காணும்

மலேசியாவில் புகைமூட்ட நிலவரம் இந்த மாத இறுதிக்குள் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாசிப்புநேரம் -

மலேசியாவில் புகைமூட்ட நிலவரம் இந்த மாத இறுதிக்குள் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் காட்டுத் தீச்சம்பவங்களால் மலேசியாவில் புகைமூட்டம் ஏற்பட்டிருக்கிறது.

மலேசிய அரசாங்கம் காட்டுத் தீச்சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டுவரத் தயாராக இருக்கிறது என எரிவாயு, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுப்புறம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் இயோ பீ யின் (Yeo Bee Yin) தெரிவித்தார்.

புகைமூட்டப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, சென்ற மாதம் மற்ற நாடுகளைச் சந்தித்து மலேசிய அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது.

இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதர் இன்று இந்தோனேசியாவின் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துக் காட்டுத் தீச்சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதன் அவசியத்தை வலியுறுத்துவார் என அமைச்சர் இயோ குறிப்பிட்டார்.

புகைமூட்டம் மோசமாக இருக்கும் வட்டாரங்களில் செயற்கை மழையைப் பெய்ய வைத்துத் தற்காலிகமாக நிவாரணம் அளிக்க மலேசிய அரசாங்கம் தயாராக இருக்கிறது என அவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்