மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு இன்று நடப்புக்கு வந்துள்ளது
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு இன்று நடப்புக்கு வந்துள்ளது
மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு இன்று நடப்புக்கு வந்துள்ளது.
மோசமடைந்து வரும் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த மலேசியா முழுவதும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கும்.
கிருமிப்பரவல் சூழலுக்கு ஏற்ப, ஆகஸ்ட் முதல் தேதி வரை அல்லது அதற்கு முன்னர் வரை நெருக்கடி நிலை நீடிக்கும்.
அந்தக் காலகட்டத்தில் நாடாளுமன்றக் கூட்டமோ, பொதுத் தேர்தலோ நடத்தப்படாது என்று மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் கூறினார்.