COVID-19: மலேசியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,000-ஐத் தாண்டியது
COVID-19: மலேசியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,000-ஐத் தாண்டியது
மலேசியாவில் நேற்றுப் புதிதாக 1,884 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
மேலும் இருவர் கிருமித்தொற்றால் மாண்டனர்.
இந்நிலையில், ஆண்டு இறுதியில் மலேசியர்கள் சொந்த ஊருக்குத் திரும்பவேண்டாம் என்று அந்நாட்டுச் சுகாதார அமைச்சு வலியுறுத்துகிறது.
கிருமிப் பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் அதற்குக் காரணம்.
மலேசியாவில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 56,000-க்கும் அதிகம்.
337 பேர் மாண்டனர்.
இந்நிலையில் மலேசியாவில் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளானதையடுத்து, 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.