மலேசிய உடல்பிடிப்பு நிலையங்களில் மேற்கொண்ட சோதனையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது
மலேசிய அதிகாரிகள், இவ்வாண்டுத் தொடக்கம் முதல் 50க்கு மேற்பட்ட உடல்பிடிப்பு நிலையங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைதானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அதிகாரிகள், இவ்வாண்டுத் தொடக்கம் முதல் 50க்கு மேற்பட்ட உடல்பிடிப்பு நிலையங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைதானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடங்களில் சட்டவிரோதப் பாலியல் சேவைகள் வழங்கப்பட்டன என்று New Straits Times நாளேடு தகவல் வெளியிட்டது.
சிலாங்கூர், கோலாலாம்பூர், ஜொகூர், பேராக் (Selangor, Kuala Lumpur, Johor, Perak) ஆகிய இடங்களில், ஜனவரி முதல் மே மாதம் வரை அந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக அந்நாளேடு சொல்லிற்று.
தாய்லந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கைதானதாகத் தெரிவிக்கப்பட்டது.