Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"கோலாலம்பூரில்தான் இருக்கிறேன்" - வதந்திக்கு விளக்கமளித்துள்ள மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் (Muhyiddin Yassin), தாம் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
"கோலாலம்பூரில்தான் இருக்கிறேன்" - வதந்திக்கு விளக்கமளித்துள்ள மலேசியப் பிரதமர்

(கோப்புப் படம்: Bernama)

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் (Muhyiddin Yassin), தாம் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

 கோலாலம்பூரில் உள்ள தம் இல்லத்தில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நோன்புப் பெருநாளுக்கு முன்னர், திரு. முஹிதீன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதில் பங்கேற்ற ஓர் அதிகாரிக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. பிறகு, திரு. முஹிதீன் இடம் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்குக் கிருமித்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

என்றாலும், இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்