மலேசியா: 16.6 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் 3ஆவது இலகு ரயில் திட்டம்
மலேசியாவில் 16.6 பில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள மூன்றாவது இலகு ரயில் திட்டம் தொடங்கப்படுவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 16.6 பில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள மூன்றாவது இலகு ரயில் திட்டம் தொடங்கப்படுவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
முன்பு முன்னுரைக்கப்பட்ட செலவான 31.6 பில்லியன் ரிங்கட்டில் கிட்டத்தட்ட பாதி அது.
மீண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலமும் முக்கிய பங்குதாரர்களுடன் நடந்த விவேகமான கலந்துரையாடலின் மூலமும் அது சாத்தியமானதாக திரு லிம் கூறினார்.
37 கிலோமீட்டர் நீளம் கொண்ட அந்தப் புதிய பாதை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களுக்குச் சேவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு, ஒவ்வொரு வழியிலும் 36,700 பயணிகள் அதில் செல்லலாம்.