வான் அஸிஸா சிலாங்கூர் மாநிலத்தில் போட்டி
மக்கள் நீதிக் கட்சியின் தலைவரான வான் அஸிஸா வான் இஸ்மாயில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடவுள்ளார்.
மலேசியா: மக்கள் நீதிக் கட்சியின் தலைவரான வான் அஸிஸா வான் இஸ்மாயில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடவுள்ளார்.அக்கட்சியின் அதிகாரிகள் அந்தத் தகவலை வெளியிட்டனர்.
அன்வார் இப்ராஹிமின் மனைவியான டாக்டர் வான் அஸிஸா பினாங்கில் உள்ள தமது பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டியிட மாட்டார்.
அவருக்கு பதிலாக அவர்களின் மகள், நூருல் இஸ்ஸா, அத்தொகுதியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.