தானியக்க வங்கி இயந்திரத்தில் ஊடுருவும் கருவியைப் பொருத்திய ஆடவர்கள் கைது
கோலாலம்பூரிலுள்ள ஒரு தானியக்க வங்கி இயந்திரத்தில் ஊடுருவல் கருவியைப் பொருத்தியதாக நம்பப்படும் மூவரை மலேசியக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்
கோலாலம்பூரிலுள்ள ஒரு தானியக்க வங்கி இயந்திரத்தில் ஊடுருவல் கருவியைப் பொருத்தியதாக நம்பப்படும் மூவரை மலேசியக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
அந்த இயந்திரத்துக்கு அருகில் இருந்த கடையில் சந்தேக நபர்கள் பிடிபட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு, காவல்துறை அதிகாரிகள் ஐவர் நடத்திய சோதனையில் ஊடுருவலுக்கான கள்ளச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.