5 மாதக் குழந்தையைக் கொன்று, உடலை உறைபதனப்பெட்டியில் வைத்த பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு
5 மாதக் குழந்தையைக் கொன்று, உடலை உறைபதனப்பெட்டியில் வைத்திருந்த பராமரிப்பாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
5 மாதக் குழந்தையைக் கொன்று, உடலை உறைபதனப்பெட்டியில் வைத்திருந்த பராமரிப்பாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குழந்தையைத் துன்புறுத்தியதில், அந்த 5 மாதச் சிசுவின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
குழந்தை காணாமல் போனதாகப் புகார் செய்யப்பட்டது.
பின்னர் 33 வயது பராமரிப்பாளர் நூர் அகிலா அப்தூல் ரஹ்மானின் (Noor Aqilah Abd Rahman) வீட்டிலுள்ள உறைபதனப்பெட்டியில் அந்தக் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவரின் குற்றம் நிரூபணமானால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.