நண்பர்களுடன் நீச்சலுக்குச் சென்று பரிதாபமாக உயிரிழந்த சகோதரர்கள்
மலேசியாவின் பாஹாங் மாநிலத்திலுள்ள கழிமுகப் பகுதியில் நீச்சலுக்குச் சென்ற சகோதரர்கள் இருவர் பரிதாபமாக மூழ்கி மாண்டனர்.
மலேசியாவின் பாஹாங் மாநிலத்திலுள்ள கழிமுகப் பகுதியில் நீச்சலுக்குச் சென்ற சகோதரர்கள் இருவர் பரிதாபமாக மூழ்கி மாண்டனர்.
அவர்களுடன் இருந்த இரு நண்பர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில் நீச்சலுக்குச் சென்ற சிறுவர்கள் நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. துணுக்குற்ற சிறுவர்களின் தாயார் கழிமுகப் பகுதிக்குச் சிறுவர்களைத் தேடிச் சென்றார். கூட்டம் கூடியது. தேடல் தொடங்கியது.
இரவு 7.30 மணிவாக்கில் பாஹாங் தீயணைப்பு, மீட்புப் பணிப் பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
சகோதரர்களில் ஒருவரின் சடலம் உடனடியாக மீட்கப்பட்டது. இரவு 9 மணிவாக்கில் மற்றொரு சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
விளையாட்டாக சிறுவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றிருக்கவேண்டும். அங்கு தண்ணீரின் வேகத்தில் நீந்தத் திணறி, சகோதரர்கள் மூழ்கி மாண்டிருக்கவேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.