மலேசியா: 26 குற்றவாளிகளுடன் சென்ற காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளானது
மலேசியாவில், 26 குற்றவாளிகளுடன் பயணம் செய்துகொண்டிருந்த காவல்துறை வாகனம் முன்னால் இருந்த காவல்துறைக் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
மலேசியாவில், 26 குற்றவாளிகளுடன் பயணம் செய்துகொண்டிருந்த காவல்துறை வாகனம் முன்னால் இருந்த காவல்துறைக் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் 4 காவல்துறை அதிகாரிகள் உட்பட இரு கைதிகள் காயமடைந்துள்ளனர்.
நேற்று (ஏப்ரல் 15) சிரம்பானில் பிற்பகல் மணி ஒன்றேகால் அளவில் விபத்து நேர்ந்தது.
அடையாளம் காணப்படாத கார் ஒன்று சாலைச் சந்திப்பில் குறுக்கே சென்றதால், முன்னால் சென்ற காவல்துறைக் கார் திடீரென நிற்க நேர்ந்தது. அப்போது பின்னால் இருந்த வாகனம் அதை மோதியது.
இரு வாகனங்களும் சாலையின் வெவ்வேறு பக்கங்களில் சறுக்கிச் சென்றன. கைதிகளோடு சென்ற வாகனம் சாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். மற்ற கைதிகளைக் காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்ல லாரி ஒன்று அனுப்பப்பட்டது.