மலேசியா: குழந்தைப் பால் மாவைத் திருடிய சந்தேகத்தின்பேரில் தம்பதி கைது
ஜொகூர் பாருவில் உள்ள கடைத்தொகுதியிலிருந்து பொருள்களைத் திருடிய சந்தேகத்தின்பேரில் மலேசியத் தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஜொகூர் பாருவில் உள்ள கடைத்தொகுதியிலிருந்து பொருள்களைத் திருடிய சந்தேகத்தின்பேரில் மலேசியத் தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெவ்வேறு பெயர்களைக் கொண்ட 15 பால்மாவு டின், 2 ஊட்டச்சத்துப் போத்தல்கள், கோழிச் சாறு கொண்ட 7 பெட்டிகள் ஆகியவற்றை அவர்கள் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
வழக்கத்திற்கு மாறாக இருவரும் நடந்துகொண்டதால் பாதுகாவல் அதிகாரியின் பிடியில் அவர்கள் சிக்கினர்.
அந்தச் சம்பவம் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.