1MDB மோசடி குறித்த விசாரணை தொடருமா? இன்று தெரியவரும்
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பட்டுள்ள 1MDB நிதி மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடருமா என்று மலேசிய நீதிமன்றம் இன்று அறிவிக்கும்.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பட்டுள்ள 1MDB நிதி மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடருமா என்று மலேசிய நீதிமன்றம் இன்று அறிவிக்கும்.
மலேசிய அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1MDB-யிலிருந்து மில்லியன்கணக்கான டாலர் தொகை திரு நஜிப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் தொடர்பில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இன்று வெளியிடப்படவுள்ள முடிவில் விசாரணையைத் தொடர்வதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளனவா, அதிலிருந்து திரு நஜிப்பை விடுவிக்கலாமா என்பதை நீதிபதி முடிவு செய்வார்.
1MDB நிதி மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் ஏப்ரல் மாதம் திரு நஜிப் மீது விசாரணை தொடங்கியது.
அவர் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.